Saturday, 26 January 2013

cinseekissjo


ஒரு அழகான பெண் வாழ்க்கையை வெறுத்து, உயரமான மலையிலிருந்து குதிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்குவந்த ஒருவர் அவளை எவ்வளவு சமாதனப்படுத்தியும் அவள் சமாதானமாகவில்லை. "ஓகே எப்படியிருந்தாலும் சாகத்தானே போறே? அதற்குமுன் எனக்கொரு முத்தம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொள்" என்றார். அவளும் அதேபோல் கொடுத்தவுடன், "பார்த்தியா முத்தம் எவ்ளோ நல்லா இருக்கு, இந்த இன்பத்தை எல்லாம் விட்டுவிட்டு எதற்காக நீ சாக வேண்டும்?என்றார். "என்ன பண்ணுவது உங்களுக்கு தெரிகிறது, நான் இதுபோல் பெண்வேடம் போட்டிருந்தால் உங்களுக்கு பிடித்திருக்கிறது, ஆனால் எங்கம்மா எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறாள், அதற்காகத்தான் நான் தற்கொலைக்கு முயற்சித்தேன்." ஆகவே முத்தம் வாங்குவதற்கு முன் எப்போதும் கவனமாய் இருங்கள்.
அந்தக் கடையில் வாடிக்கையாளர்கள் வரிசையில் வந்து கொண்டிருந்தார்கள்.

செல்வந்தர் ஒருவர் வரிசையை உடைத்துக் கொண்டு நுழைய முயன்றார்.

மற்றவர்கள் தடுத்ததும் ஆவேசமாய்ச் சொன்னார்,

“நான் யார் தெரியுமா?”.

கடை ஊழியர் பணிவாய்ப்பேசி அவரை நகர்த்த முயன்றார்.

“நான் யார் தெரியுமா? உறுமினார். மேலாளர் வந்து வரிசையில் வரப்பணித்ததும் “நான் யார் தெரியுமா?” என்றார்.

மேலாளர் அலுவலக ஒலிபெருக்கியில் அறிவித்தார்.

“தான் யார் என்று தெரியாமல் ஒரு மனிதர் எதிரே வரும் எல்லோரிடமும் கேட்கிறார்.

அறிந்தவர் யாரேனும் அடையாளம் காண உதவுங்கள்!”

தன்னை மறப்பதே தலைக் கனத்தின் இலக்கணம்.
அப்போது புலி ஒன்று வந்தது.புலியைக்கண்டு சீடர்கள் பயந்தனர்.அப்போது துறவி பயப்படாது அங்கேயே மண்டியிட்டு இறைவனை வேண்டினார்.,'

'கடவுளே,இந்தப் புலியை சாந்தப் படுத்தி அனுப்பி விடு.''என்ன ஆச்சரியம்!புலியும் அவரைப் போல மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தது.

சீடர்களுக்கு மிகுந்த வியப்பு.துறவி சொன்னார்,''என் பிரார்த்தனைக்கு இறைவன் செவி சாய்த்து விட்டான்.

''அப்போது புலி சொன்னது,''எனது பிரார்த்தனைக்கும் இறைவன் செவி சாய்த்து விட்டான்

.நான் எதையும் அடித்து ச சாப்பிடுமுன் பிரார்த்தனை செய்து இறைவன் அனுமதி பெறுவது வழக்கம்

*****************************************

ஒரு குழந்தையை நடை வண்டியில் வைத்துத் தள்ளியபடி நடந்து கொண்டிருந்தான் 
ஒருவன்.குழந்தை பயங்கரமாக வீரிட்டு அழுதது.நடை வண்டியைத் தள்ளி வந்தவன் 
''டேய்ஜான்,கோபப்படாதே,செல்லம் ....என் கண்ணல்ல,அமைதியாய் இருடா''என்று உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த ஒரு பெண் அவனுடைய பொறுமையையும் அன்பையும் பாராட்டினார்.அப்புறம் குழந்தையிடம் திரும்பி ''ஜான்,ஏண்டாஅழுகிறாய்?''என்று கொஞ்சினாள்.அப்போது அவன் சொன்னான்,
''அட!குழந்தையின் பெயர் ஜான் இல்லை.என்னுடைய பெயர் தான் ஜான்.
நான் பொறுமையாய் இருக்க என்னை நானே சமாதானம் செய்து கொண்டிருந்தேன்.''

*









No comments:

Post a Comment