Saturday 13 April 2013

1 karmanivaranam ,diet,numerology,remedy,vasthu

1

ஆவாரம்பூ சாதம் .


சுகர் ப்ரீ ரைஸ் -2
 ஆவாரம்பூ சாதம் செய்யத்தேவையான பொருட்கள்.
அரிசி. - 200 கிராம்
நல்லெண்ணை.--- 4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு. -- 1 கரண்டி
வற்றல் மிளகாய். - 5
எள்.பொடி  - 1 ஸ்பூன்
நாவல் கொட்டை   - 3 [ நன்கு காய்ந்தது ]
ஆவாரம்பூ - 1/4 ஸ்பூன் 
மிளகு  - 1 ஸ்பூன்
உப்பு. - அரை ஸ்பூன்
பெருங்காயம். -  சிறு துண்டு.


செய்முறை:-
இருப்புச்சட்டியில் எண்ணை சேர்க்காமல் முத
லில் எள்ளை வறுத்து தனியாக வைத்துக்கொள்ள
வும். பின்பு அந்த இருப்புச்சட்டியில் சிறிது எண்ணை
சேர்த்துக்கொண்டு உளுந்து,ஆவாரம்பூ நாவல் கொட்டை    , வற்றல் மிளகாய்,
பெருங்காயம் முதலியவற்றை வறுத்துக்கொள்ளவும்.
வறுத்தெடுத்த பொருட்களை எள் சேர்க்காமல் உப்பு
சேர்துக்கொண்டு அம்மியில் வைத்துப்பொடி செய்து
கொண்டபின்பு எள்ளையும் அதனுடன் சேர்த்து பொ
டிசெய்து கொள்ளவும்.

சாதத்தை உதிரிப்பதமாக வடித்துக்கொள்ளவும். பின்பு
அந்த சாதத்தில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணையை
ஊற்றி நன்கு உதிர்த்துக்கொண்டு எள்ளுப்பொடியைச்
சேர்த்துக்கொண்டு மிகுதி நல்லெண்ணையையும்
சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் கடைசியில்
கருவேப்பிலையச்சேர்த்துக்கொள்ளவும். இப்போது
எள் சாதம் தயாராகிவிட்டது.

Friday 1 March 2013

ஓம் எனும் மந்திரத்தை


ஓம் எனும் மந்திரத்தை சொல்வது ஏன்?
 பாரத மக்களால் பக்தியுடன் உச்சரிக்கப்படும் மந்திரம்-ஓம் இது, உச்சரிப்பவர்களின் மனதிற்கும், உடலுக்கும் அவர்களின் சுற்றுச்சூழலிலும் அமைதியை ஏற்படுத்துவதோடு, நன்மை தரும் மின்னலையும் உண்டாக்குகிறது. பெரும்பாலான மந்திரங்களும், வேதப் பிரார்த்தனைகளும் ஓம் என்ற ஒளியுடன் தான் தொடங்குகின்றன. மங்கள நிகழ்ச்சிகளும் ஓம் என்ற ஒலியுடனே தொடங்கப்படுகின்றன. ஒருவரை வரவேற்கும்போது ஓம் என்றோ ஹரிஓம் என்றோ கூறி வரவேற்பது ஒரு காலத்தில் நம் நாட்டில் வழக்கிலிருந்தது. தியானம் செய்யும்பொழுது ஓம் எனும் மந்திரமே மனதுக்குள் உச்சரிக்கப்படுகிறது. ஓம் எனும் எழுத்து வடிவமும் பக்தியுடன் வணங்கப்படுகிறது. ஓம்- ஒரு மங்களச் சின்னமாகப் போற்றப்படுகிறது. ஓம் என்பது இறைவனின் பொதுப் பெயர். இச்சொல் அ+உ+ம என்ற மூன்றெழுத்துகளால் ஆனது ஆ எனும் ஒலி நம் தொண்டையின் அடிப்பாகத்தில் உள்ள குரல் நாண்களிலிருந்து தோன்றுகிறது. உதடுகளைக் குவித்து உ சொல்லப்படுகிறது. உதடுகள் சேரும்போது ம எனும் ஒலியில் அது முடிவடைகிறது. இந்த மூன்று எழுத்துகளும் விழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் ஆழ்ந்த உறக்க நிலை ஆகிய மூன்று நிலைகளையும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களையும் ரிக், யஜுர் மற்றும் சாம என்ற மூன்று வேதங்களையும் பூ, புவஹ, சுவஹ என்ற மூன்று உலகங்களையும் குறிக்கின்றன.

இறைவன் இவை அனைத்துமாக, இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவனாக விளங்குகிறான். இறைவன் (பிரம்மம்) உருவமற்றவன்; குணங்களற்றவன். ஓம் எனும் மந்திரத்தை உச்சரிக்கையில் இரண்டு ஓம் ஒலிகளுக்கிடையில் நிலவும் நிசப்தம் இறைவனைக் குறிக்கிறது. ஓம் பிரணவம் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, இறைவனின் மகிமையைக் குறிக்கும் ஒலி அல்லது ஒலி வடிவம்! வேதங்களின் சாரம் அனைத்தும் ஓம் என்ற மந்திரத்தில் அடங்கியுள்ளன. இறைவன் ஓம் அத: என்ற ஒலிகளை எழுப்பிய பிறகே சிருஷ்டியைத் தொடங்கினான் என்று கூறப்படுகிறது. எனவேதான் எந்த ஒரு வேலையைத் தொடங்கவதற்கு முன்பும் ஓம் என்று கூறுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ஓம் என்று கூறும்பொழுது எழும் ஓசை ஒரு மணியின் ஓசை போல் எதிரொலிக்க வேண்டும். அந்த ஒலி மனதை அமைதியில் ஆழ்த்தி ஒருமுகப்படுத்துகிறது. மனம் இந்த நுட்பமான ஒலியால் மூழ்கடிக்கப்படுகிறது. ஞானத்தை நாடுபவர்கள் ஓம் எனும் மந்திரத்தின் ஆழ்ந்த கருத்தில் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்து முக்தியடைகின்றனர். ஓம் பலவிதமாக எழுதப்படுகிறது. பொதுவாக எங்கும் பயன்படுத்தும் வடிவம் விநாயகரைக் குறிக்கிறது. ஓம் என்ற எழுத்தின் மேல் உள்ள வளைவு தலையையும், அடிப்பாகம் வயிறையும், பக்கத்தில் உள்ள வளைவு துதிக்கைகளையும் குறிக்கின்றன. புள்ளிடன் கூடி அரைவட்டம் விநாயகரின் கையையும் அதில் உள்ள மோதகத்தையும் குறிக்கிறது. இவ்வாறு ஓம் வாழ்க்கையின் லட்சியம். அதனை அடையும் வழி, படைக்கப்பட்ட உலகம், படைப்பின் பின்னே உள்ள பேருண்மை, புனிதமான மற்றும் உலகாயதமான பொருட்கள், உருவமுள்ளவை, உருவமற்றவை ஆகிய அனைத்தையும் குறிப்பதாக உள்ளது.
*************************************************
ஓம் என்று செபிப்பவனைப் பக்தன் என்போம்
    உட்பொருளை உணர்ந்தவனை ஞானி என்போம்.
    மகரிஷி
    வேதாத்திரி மகரிஷி.
****************************************
//"ஓம் பூர்ண மதஹ் பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய
    பூர்ணமே வா வசிஷ்யதே'.//

    "அங்கிருப்பதும் பூரணம்; இங்கிருப்பதும் பூரணம். பூரணத்திலிருந்து பூரணம் உண்டாகி யுள்ளது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்பும் மிஞ்சி நிற்பதும் பூரணமே' என்பது மேற்சொன்ன சுலோகத்தின் பொருள். பூரணத்தைப் பிரித்தால்கூட அதுவும் பூரணமாகவே இருக்கும். ஆக பரம்பொருள் பூரணமானது; அதன் ஒரு சிறு பகுதியும் பூரணமே.//
*******************************************************************
ஓம் காரத்தை 'அ..உ..ம்' என்று உச்சரிப்பதே சரி. அதில் "அ" உச்சரிப்பு அடிவயிற்றில் இருந்து சப்தமாக வெளிவர வேண்டும், "உ" உச்சரிப்பு சப்தமாக அடிவயிற்றைக் கடந்து நெஞ்சுக்கூட்டுக்கும் அடிவயிற்றிற்கும் இடையில அதிர்வை ஏற்படுத்த வேண்டும், "ம்" சப்தமானது வயிற்றில் ஏற்பட்ட அதிர்வு மூக்கு நுனியில் முடியுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதுவே சரியான ஓம் கார உச்சரிப்புமுறை என்று பல ஆன்மிக குருமார்களும் தெரிவிக்கின்றனர்.
********************************************************************************
 இரு காதுகளை மூடிக்கொன்டு எமக்குள்லிருந்து வரும் சத்தத்தை அவதானித்தால் அதுவும் ஓம்காரம்தான்  அதேபோல கடற்கரையிலிருந்து எழும் ஓசையை அவதானித்தால் அதுவும் ஓம்காரம்தான். அதைப்போல் காடுகளின் நடுவிலீருந்து எழும் ஓசையை அவதானித்தால் அதுவும் ஓம்காரம்தான்.
***********************************************************************************************************************************

"யாராவது உடல்குன்றி வியாதியுடன் படுக்கையில் வீழ்ந்திருக்கும் போது  எதாவது பழத்தை வாங்கி அதைக்கட்டைவிரலாலும் ஆழ்காட்டிவிரலாலும் பிடித்துக்கொண்டு வலது கையினால் அதன் மேல் " ஓம் " என்று எழுதிவிட்டு
அதை 108 தட்வையோ  அல்லது 1008 தடவையோ உருவேற்றி பின் வாயால் ஊதிவிட்டு அந்தப்பழத்தை அந்த நோயளிக்கு அளிக்க 
அவர் விரைவில் குணமடைந்து விடு
வார்
******************************************************************************
3. பிரணவ சமாதி
1    தூலப் பிரணவம் சொரூப ஆனந்தப் பேர் உரை
பாலித்த சூக்கும மேலைச் சொரூபப் பெண்
ஆலித்த முத்திரை ஆம் அதில் காரணம்
மேலைப் பிரணவம் வேத அந்த வீதியே.
   

           
   
2    ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே உருவரு
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே பல பேதம்
ஓம் எனும் ஓங்காரம் ஒண் முத்தி சித்தியே.


           
   
3    ஓங்காரத்து உள்ளே உதித்த ஐம் பூதங்கள்
ஓங்காரத்து உள்ளே உதித்த சரா சரம்
ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பர சிவ ரூபமே.
***********************************************************************************

Monday 28 January 2013

சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?,தக்காளி சட்னி

 முத்திரை தியானம் கற்று வாழ்வில் உயர்வு பெற என் நண்பனை அணுகவும்
பொங்கல் தக்காளி சட்னி படத்தை தொடர்ந்து படிக்கலாம்.
சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?
சர்க்கரை பொங்கல்
தேவையானவை :
சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?
பச்ச அரிசி 2 கப்
பாசி பருப்பு 1/2கப்
பால் 1/2 கப்
முந்திரிப்பருப்பு 10
வெல்லம் 2 1/2 கப்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் 1 டீஸ்பூன்
திராட்சை 4
செய்முறை:
பாசி பருப்பை அரை ஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.சிறிது நெய்யில், முந்திரிப்பருப்பையும் , திராட்சையையும் பொன்னிறமாக வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி ப‌ருப்பு ஒன்றாக‌ போட்டு 5 க‌ப் த‌ண்ணீர் + பால் சேர்த்து குக்கரில் மூடி வேகவிடவும் 4 சவுண்ட் வரணும் வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டவும்.அரிசி ப‌ருப்பு வெந்த‌தும் இற‌க்கி ந‌ன்கு ம‌சிக்க‌வும்.அதில் க‌ரைத்து வைத்த‌ வெல்ல‌த்தை சேர்த்து அடுப்பில் வைத்து ந‌ன்கு கிள‌ற‌வும் கெட்டி ஆன‌தும் ஏல‌ப்பொடி வ‌றுத்து வைத்த‌ முந்திரி பருப்பு போட்டு நெய் விட்டு இற‌க்க‌வும்



தக்காளி சட்னி
*மூன்று தக்
காளி, 3 அல்லது 4 சின்ன வெங்காயம் (அல்லது ஒரு பெரிய வெங்காயம்), ஒரு பச்சை மிளகாய், ஒரு டீ ஸ்பூன் கடுகு, இரண்டு டீஸ்பூன் எண்ணெய், 4 -5 கருவேப்பிலை.
பச்சை மிளகாயை மூன்று துண்டாக நறுக்கவும். வெங்காயத்தையும் சின்ன சின்னதாக நறுக்கவும். தக்காளியை சிறு சிறு துண்டாக வெட்டிக் கொள்ளவும்.
அடுப்பை ஆன் செய்து, கடாயை வைத்து தீயை மீடியம் அளவில் வைக்கவும்.
எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகை போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடிக்கும்போதே கருவேப்பிலையும் சேர்த்துவிடவும். பின்னர் பச்சை மிளகாயை போட்டு பிரட்டி விடவும்
நறுக்கிய தக்காளியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் வெந்து கண்ணாடி போல தெரியும்போது அரைத்த தக்காளியை ஊற்றவும். 1/4 கப் தண்ணீரை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அலாசி அதையும் ஊற்றவும்.
கடாயை மூடி போட்டு மூடி விடவும். 5 நிமிடம் சரியாக கம்மி தீயிலேயெ கொதிக்க விடவும். உப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரி பார்க்கவும்.

 

Saturday 26 January 2013

cinseekissjo2

அவர் : ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படி தங்க முடியும்?
கொஞ்சம் பெரிசா பாருங்களேன்.
ரூம் பாய் : யோவ் இது லிப்ட்யா. ரூம் மாடில இருக்கு.


CSEE MAX HOME WORK

கல்லூரியில் கணித வகுப்பு. 

உலகின் பெரிய கணித மேதைகளால்தீர்க்க முடியாத இரண்டு கணக்குகளை பலகையில் எழுதிய ஆசிரியர்

, அவை இன்றும் புரியாத புதிர் என்றார்.

சற்று தாமதமாய் அந்த மாணவன் வந்தான்.

அதற்குள் வகுப்பு முடிந்திருந்தது.

அந்தக் கணக்குகளை வீட்டுப்பாடங்கள் என்று நினைத்து குறித்துக்கொண்டு போனான்.

மறுநாள் விடையுடன் வந்தான்.

அந்த சம்பவத்தாலேயே உலகப் புகழ்பெற்ற அந்த மாணவன்தான்

ஜார் ஜ்டாந்த்ஸிக்.

அந்த சம்பவத்துக்கு அவர் தந்த விளக்கம்,

“அது யாராலும் முடியாது என்று எனக்குத் தெரியாது.

எனவே என்னால் முடிந்தது”.

cinseekissjo


ஒரு அழகான பெண் வாழ்க்கையை வெறுத்து, உயரமான மலையிலிருந்து குதிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்குவந்த ஒருவர் அவளை எவ்வளவு சமாதனப்படுத்தியும் அவள் சமாதானமாகவில்லை. "ஓகே எப்படியிருந்தாலும் சாகத்தானே போறே? அதற்குமுன் எனக்கொரு முத்தம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொள்" என்றார். அவளும் அதேபோல் கொடுத்தவுடன், "பார்த்தியா முத்தம் எவ்ளோ நல்லா இருக்கு, இந்த இன்பத்தை எல்லாம் விட்டுவிட்டு எதற்காக நீ சாக வேண்டும்?என்றார். "என்ன பண்ணுவது உங்களுக்கு தெரிகிறது, நான் இதுபோல் பெண்வேடம் போட்டிருந்தால் உங்களுக்கு பிடித்திருக்கிறது, ஆனால் எங்கம்மா எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறாள், அதற்காகத்தான் நான் தற்கொலைக்கு முயற்சித்தேன்." ஆகவே முத்தம் வாங்குவதற்கு முன் எப்போதும் கவனமாய் இருங்கள்.
அந்தக் கடையில் வாடிக்கையாளர்கள் வரிசையில் வந்து கொண்டிருந்தார்கள்.

செல்வந்தர் ஒருவர் வரிசையை உடைத்துக் கொண்டு நுழைய முயன்றார்.

மற்றவர்கள் தடுத்ததும் ஆவேசமாய்ச் சொன்னார்,

“நான் யார் தெரியுமா?”.

கடை ஊழியர் பணிவாய்ப்பேசி அவரை நகர்த்த முயன்றார்.

“நான் யார் தெரியுமா? உறுமினார். மேலாளர் வந்து வரிசையில் வரப்பணித்ததும் “நான் யார் தெரியுமா?” என்றார்.

மேலாளர் அலுவலக ஒலிபெருக்கியில் அறிவித்தார்.

“தான் யார் என்று தெரியாமல் ஒரு மனிதர் எதிரே வரும் எல்லோரிடமும் கேட்கிறார்.

அறிந்தவர் யாரேனும் அடையாளம் காண உதவுங்கள்!”

தன்னை மறப்பதே தலைக் கனத்தின் இலக்கணம்.
அப்போது புலி ஒன்று வந்தது.புலியைக்கண்டு சீடர்கள் பயந்தனர்.அப்போது துறவி பயப்படாது அங்கேயே மண்டியிட்டு இறைவனை வேண்டினார்.,'

'கடவுளே,இந்தப் புலியை சாந்தப் படுத்தி அனுப்பி விடு.''என்ன ஆச்சரியம்!புலியும் அவரைப் போல மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தது.

சீடர்களுக்கு மிகுந்த வியப்பு.துறவி சொன்னார்,''என் பிரார்த்தனைக்கு இறைவன் செவி சாய்த்து விட்டான்.

''அப்போது புலி சொன்னது,''எனது பிரார்த்தனைக்கும் இறைவன் செவி சாய்த்து விட்டான்

.நான் எதையும் அடித்து ச சாப்பிடுமுன் பிரார்த்தனை செய்து இறைவன் அனுமதி பெறுவது வழக்கம்

*****************************************

ஒரு குழந்தையை நடை வண்டியில் வைத்துத் தள்ளியபடி நடந்து கொண்டிருந்தான் 
ஒருவன்.குழந்தை பயங்கரமாக வீரிட்டு அழுதது.நடை வண்டியைத் தள்ளி வந்தவன் 
''டேய்ஜான்,கோபப்படாதே,செல்லம் ....என் கண்ணல்ல,அமைதியாய் இருடா''என்று உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த ஒரு பெண் அவனுடைய பொறுமையையும் அன்பையும் பாராட்டினார்.அப்புறம் குழந்தையிடம் திரும்பி ''ஜான்,ஏண்டாஅழுகிறாய்?''என்று கொஞ்சினாள்.அப்போது அவன் சொன்னான்,
''அட!குழந்தையின் பெயர் ஜான் இல்லை.என்னுடைய பெயர் தான் ஜான்.
நான் பொறுமையாய் இருக்க என்னை நானே சமாதானம் செய்து கொண்டிருந்தேன்.''

*









CINDOGE

தனக்கு கிடைக்காதது
யாருக்கும் கிடைக்கக்கூடாது
என்று சிந்திக்கிறவன் சமூக விரோதியாகிறான்.
தனக்கு கிடைக்காதது
மற்றவர்களுக்காவது கிடைக்கட்டும்
என்று கருதுபவன் சமூக சீர்திருத்தவாதி யாகிறான்


*முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான்,
புத்திசாலிக் கணவனோ கண்ணே உன் உதடுகள் சேர்ந்திருந்தால்
நீ தேவதையாய் தெரிகிறாய் என்பான்

*ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.
எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது. வெல்பவர்கள் தளர்வதில்லை ! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது.
அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள்.

அம்மா சுட்டு வந்த தோசை தீய்ந்திருந்தது.

“நல்ல முறுகலா இருக்கே” என்று ரசித்துச் சாப்பிட்டார் அப்பா. 

அடுத்த தோசை சுட அம்மா அடுக்களைக்கு போனதும், மகள் கேட்டாள், 

“அப்பா தோசை தீய்ந்து போயிருக்கிறது, முறுகல் என்கிறீர்களே?”. 

அப்பா சொன்னார், “உன் அம்மாவுக்கு இன்று களைப்பாக இருந்திருக்கும்,

கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கும்.

ஒரு தோசை தீய்ந்து போனதை சுட்டிக்காட்டி அவள் மனம் தீய்ந்து போவதை நான் விரும்பவில்லை”.

அடுத்த தோசை நிஜமாகவே முறுகலாக வந்தது.

குறைகளை நிறைகளாய்க் கொள்ளும்போது குறைகள் தாமாகவே மறைகின்றன.

அச்சமின்மையே ஆரோக்கியம்

அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.
“என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள். 
அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.
ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!” பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்
. மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.
மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.
அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்,
“அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.
கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன்.
அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை.”
அச்சமின்மையே ஆரோக்கியம்!

Tuesday 15 January 2013

CINE kosu


கொசுக்களினால் மனிதனுக்கு பரவும் கொடிய நோய்களுள் ஒன்று மலேரியா. இது `அனாபிலிஸ் கேம்பியே' என்ற பெண் கொசு மனிதனை கடிப்பதால் பரவுகிறது. உலகில் ஒரு வருடத்திற்கு 8 லட்சம் பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.

இந்த கொடிய நோய்க்கு காரணமான கொசுவின் உற்பத்தியை எப்படி தடுத்து நிறுத்தலாம் என்பது பற்றி லண்டனில் அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஆய்வின் ஒரு பகுதியாக, இனப்பெருக்க சக்தி இல்லாத 100 ஆண் கொசுக்கள் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, அவை பெண் கொசுக்களுடன் இனச்சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்டன.

அப்போது, பெண் கொசுக்கள் வழக்கம் போல், ஆய்வாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட ஆண் கொசுக்களுடன் ஒன்று கூடின. ஆனாலும், அந்த பெண் கொசுக்கள் கருத்தரிக்கவில்லை. இது பற்றி ஆய்வாளர்கள் கூறும்போது, `இனப்பெருக்க சக்தி இல்லாத ஆண் கொசுக்களை உற்பத்தி செய்து உலவ விட்டு, நோய் பரப்பும் கொசுக்களின் இனவிருத்தியை குறைத்து விட்டால் மலேரியா நோயை முற்றிலும் ஒழிக்க முடியும்' என்று தெரிவித்தனர்


Saturday 12 January 2013

herballllllll

http://www.tamilkalanjiyam.com/medicals/sidda_medicine/index.html#.UPHngeRtjng
 வாழைப்பூ, இது வியாதிகளுக்கெல்லாம் சஞ்சீவி போன்றது. சற்று துவர்ப்பாக இருக்கும். பொடி யாக நறுக்கி சிறிது சுண்ணாம்பையோ அல்லது அரிசி கழுவிய தண்ணீரையோ கலந்து சற்று வடிய வைத்தால் அதன் துவர்ப்புச் சுவையெல்லாம் நீராக இறங்கி விடும். அதன் பிறகு அதை அவித்து பருப்பு கலந்து சமைத்து உண்ணலாம். வெகு சுவையாகவே இருக்கும். 
பேயன் வாழைப் பூவில் துவர்ப்பே இருக்காது. அதை அப்படியே (பட்டைகளை நீக்கி) சமைத்துச் சாப்பிட லாம். 

இதைப் பதமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை நோய் நீங்கும். ரத்த மூலம் போக்கும். உதிரக் கடுப்பு இருக்காது. கை, கால் எரிச்சல் நீங்கும். 

வாழைப் பூவை நறுக்கி சாறு எடுத்து அத்துடன் பனங் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மேற்கண்ட பிணிகள் எல்லாம் உடனே குணமாகும். 

வாழைப்பூக் கறி பித்தம், வாதம் உடலில் ரத்தக் குறைவு, கிராணி, வயிற்றில் பூச்சி முதலிய வியாதி களுக்கு சஞ்சீவி போன்றது. 

வாழைப்பூ சாற்றில் தயிரைக் கலந்து உட்கொண்டால் ரத்தக் கிராணி, பெரும்பாடு முதலியவை நீங்கும். நால தோலா சாற்றில் இரண்டு தோலா தயிரைக் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை உட்கொண்டால் நல்ல குணம் தெரியும். 

வாழைப்பூவை இடித்து சிற்றாமணக்கு எண்ணெய்யை விட்டு வதக்கி, கைகால் எரிச்சல் உள்ள இடத்தில் ஒற்றடமிட்டால் எரிச்சல் போகும். 

வாழைப்பூவை வாரத்திற்கொரு முறையேனும் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது.

Friday 11 January 2013

free tv cinima

http://cooltamil.com/data/newmovies.php
http://www.thiruttuvcd.me/tv/
http://www.thiruttuvcd.me/category/tamil-movies-online/
http://www.thiruttuvcd.me/category/tamil-movies-online/watch-mid-tamil-movies-online/
அனைவருக்கும் பொங்கல்  நல்வாழ்த்துக்கள் WISH YOU HAPPY PONGAL
கவிதைகள்

Wednesday 9 January 2013

தியானி

அம்மா எமனுக்கும் அஞ்சாதே , மனம் குழம்பாதே வீணாய் கலங்காதே நீ ஒருத்தி முழுமையாய் விரதம் ஜெபம் தியானம் இருந்து தினமும் சந்தோஷமாய இருந்தால் போதும் எல்லாம் உன்னை தேடி வரும் .அவசரப் படாதே,எந்த நேரமும் டி.வி முன்பு உட்காராதே தியானம் செய் ,ஜெபம் செய் அடிக்கடி தினத்தில் அல்லது ஜெபத்தில் இரு என்று எதனை தரம் சொல்வது ,ஏன் வீனானதுக்கெல்லாம் சண்டைக்கு செல்கிறாய் பதி மற்றும் தாயை கண்ணியமாக நடத்து,மிக மும்முரமாய் சதி வேலை நடக்கிறது,சொந்தம் பந்தம் மற்றும் அயலாரிடமும் தள்ளியே இரு .யாரையும் வீட்டிற்குள் சேர்க்காதே யாரிடமும் ஒட்டி உறவாடேதே ,மனித வடிவில் அவர்கள் மிருகங்கள் ,உன் வேலையை பார் உன் அறையில் தனித்திருந்து இறைவனை தியானி.   

JOKKES

ஒரு பெரிய பாக்டரி .. கிட்ட தட்ட 1000 பேருக்கு மேல வேலை பாக்குற கம்பெனி.. எல்லாம் நல்ல படியாதான் போய்கிட்டு இருந்துச்சி…
ஒரு நாள் அந்த முதலாளி பாக்டரி குள்ள ரௌண்ட்ஸ் வந்தாராம் … அப்போ ஒருத்தன் “மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம் ” அப்படின்னு படுத்து கிடந்தான் ..
அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கிகிட்டு, அவன எழுப்பினார் .. “தம்பி நீ மாசம் எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு “மூவாயிரம் ருபாய் சார் “ அப்படின்னான்.
உடனே அவரு பைக்குள இருந்து பர்ச எடுத்து ஒரு பத்தாயிரம் ருபாய எடுத்து தூக்கி எரிஞ்சாறு … “இதுல உன்னோட மூணு மாச சம்பளத்துக்கு மேலே ஒரு ஆயிரம் ருபாய் அதிகமா இருக்கு .. நான் இங்க சும்மா படுத்து கிட்டு இருக்குரவனுக்கு சம்பளம் குடுக்க்ரதுக்கு இந்த பாக்டரிய நடத்தல..” அப்படின்னு சொன்னாரு..
அவன் ஒரு நிமிஷம் அவர குறு குருன்னு பார்த்தான் .. அப்புறம் அந்த பணத்த வாங்கிகிட்டு வேகமா வெளிய போய்ட்டான் … எல்லாரும் வாயடைச்சி போய் நின்னாங்க ..
அப்புறம் முதலாளி எல்லாரையும் கர்வமா பார்த்து … “இனிமே எல்லாம் அப்படி தான் ” (தமிழ் பட டயலாக் ) அப்படின்னாரு. அப்புறமா கணக்குபிள்ளய கூப்பிட்டு “யார்யா அவன் ??” அப்படின்னு கேட்டாரு…
அதுக்கு அந்த கணக்கு பிள்ளை சொன்னான் … ” டீ கொண்டு வந்த பையன் மொதலாளி ..

**************************************************************************
மிஸ்டர்.மொக்கையின் வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டகாலம்..! 
கடவுளை உள்ளம் உருக வேண்டினார்.. "சாமி.. இந்த மாத குலுக்கலில் எனக்கே முதல் பரிசு விழணும்.. முதல் பரிசு அஞ்சு லட்சமாம்.. தயவு பண்ணுப்பா பகவானே..!"

குலுக்கல் நாள்.. வேறு யாருக்கோ பரிசு விழுந்து , மொக்கை ரொம்ப பீல் ஆயிட்டாரு.

அடுத்த மாத குலுக்கல் நேரம்.. மொக்கை இம்முறையும் ரொம்ப நம்பிக்கையா வேண்டிக்கிட்டார். ஆனால் பரிசென்னவோ மொக்கையின் பக்கத்து வீட்டுக் காரனுக்கு..!

"அடக் கடவுளே.. நான் உன்கிட்ட கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சறேன்.. நீ என்னடான்னா அடுத்த வீட்டுக்காரன் கையில காசைக் குடுத்து குசும்பு பண்ணறே..! நான் எவ்வளவு கஷ்டத்திலே இருக்கேன் தெரியுமா..? உனக்கு மனசாட்சியே கிடையாதா..?

கடவுள் சொன்னார்..

" மண்ணாங்கட்டி எல்லாம் எனக்கு இருக்கு.. உனக்குதான் மூளையே இல்ல.. குலுக்கலில் பரிசு விழணும்ன்னா முதல்ல சீட்டு வாங்குடா மூதேவி..!"


*******************************************************************************
நேத்து சினிமா பார்க்கும் போது அழுதுவிட்டேன்!
எந்த இடத்தில்?
உட்கார்ந்த இடத்தில்தான்

********************************************************************************
உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.
பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்...

*********************************************************************************
"டாக்டர், நான் யார் பேச்சையுமே கேட்குறதில்லை"

"அதை என்னிடம் வந்து ஏன் சொல்றீங்க?"

"காது சரியா கேட்கலை; அதை சரி பண்ணுங்க டாக்டர்

******************************************************************************
--தன்னை மகா ஞானியாக கருதிக் கொண்ட ஒருவர் முல்லாவிடம் விவாதம் புரிந்து,தனது மேதாவித்தனத்தைப் பறைசாற்ற விரும்பினார்.தனது விருப்பத்தை முல்லாவிடம் தெரிவித்துக் கொண்டார் முல்லாவும் ஒப்புக்கொண்டார்.முல்லாவின் இல்லத்திலேயே ஒரு குறிப்பிட்ட நாளில் இருவரும் சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

குறிப்பிட்ட நேரத்தில் அந்த மஹா ஞானி முல்லாவின் இல்லத்திற்கு வந்தார். அனால் முல்லா வேண்டுமென்றே அந்த நேரத்தில் வேறெங்கோ சென்றுவிட்டார். வெகு நேரம் முல்லாவிற்காக காத்திருந்த ஞானி பொறுமை இழந்து எரிச்சலுடன் வெளியேற முடிவு முடிவு செய்தார்.

அப்போது ஒரு சுண்ணக் கட்டியால் முல்லாவின் வீட்டுக் கதவில் "அறிவு கெட்ட கழுதை" என்று எழுதிவிட்டு சென்றார்.அவர் சென்ற பின் முல்லா வீடு வந்து சேர்ந்தார் வாசற்கதவை பார்த்தார் தம்மோடு விவாதிக்க வந்தவர்தான் கோவத்தில் எப்படி எழுதி இருக்கிறார் என்று புரிந்து கொண்டார் .

முல்லா சிறிது நேரத்தில் அந்த ஞானியின் வீட்டிற்கு சென்றார்.அவரிடம் முல்லா "அறிஞர் பெருமானே தாங்கள் என்னை பொருத்தருள வேண்டும் தங்களை நன் வர சொன்ன நேரத்தில் வேறொரு வேலையாக வெளியே சென்று விட்டேன். வீடு திரும்பியதும் தான் தாங்கள் வந்து சென்றதை தெரிவிக்கும் வகையில் வாசற் கதவில் உங்கள் பெயரை எழுதி விட்டு சென்றதை அறிந்து தங்களிடம் மன்னிப்பு கேட்க ஓடோடி வந்தேன் "என்று அடக்கமாக கூறினார்.இதற்க்கு அந்த ஞானியால் பதில் ஏதும் கொடுக்க முடியாமல் அந்த மகா ஞானி அசடு வழிந்தார். இதுக்கு பெயர்தான் presence of mind நண்பர்களே.

********************************************************************************

ஜோக்ஸ்

ஜோக்ஸ்

”பாடிகிட்டு இருக்கும் போதே உயிர் போயிடணும்ங்கிறதுதான் இந்த வித்வானோட ஆசையாம்”

“அவருக்கா நமக்கா?”

*****************************************************************************

 ”பாடகர் பாட்டுக்கு நடுவுல அப்பப்ப எஸ்.பி.பாலசுப்ரமணியம் மாதிரி சிரிக்கிறது புது ஸ்டைலா இருக்கில்லே?”

“நாசமாய்ப் போச்சு, ஸ்டைலா அது? வில்லால பாடகர் விலாவுல வயலின்காரர் குத்திகிட்டே இருக்காரு”

 *****************************************************************************

”என்னங்க இது ராக ஆலாபனை ஆரம்பிக்கும் போது சிகரெட்டைப் பத்த வெச்சிக்கிறாரு இந்த வித்வான்?”

“கார்வையெல்லாம் வரும் போது தம் பிடிச்சிப் பாடணும்ன்னு குரு சொல்லியிருக்காராம்

 ******************************************************************************

 ”போஸ்டரைப் பார்த்தீங்களா.. நம்ம ஊர் கர்நாடக சங்கீதம் பஞ்சாப் வரைக்கும் பரவியிருக்குன்னு தெரியறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு”

“எங்கேய்யா போட்டிருக்கு?”

“பக்கவாத்தியம் வாசிக்கிறவங்கள்ள ஒருத்தர் பேரு மோர்சிங்ன்னு போட்டிருக்கு பாருங்க”

 ****************************************************************************

 ”அவர் வீணையை மீட்டினா இன்னைக்கெல்லாம் கேட்டுகிட்டு இருக்கலாம். ஏன் இந்த வருஷம் அவர் கச்சேரி இல்லை?”

“மீட்டல்லையாம்”

“அதான் ஏன்னு கேட்கிறேன்”

“சேட்டுக் கடையிலேர்ந்து வீணையை இன்னும் மீட்டல்லியாம்”

 *****************************************************************************

 ”அந்த வித்வான் புன்னாகவராளி பாடினா பாம்பு வரும். அமிர்தவர்ஷினி பாடினா மழை வரும். அப்படிப்பட்ட வித்வான் இன்னைக்குப் பிச்சை எடுத்துகிட்டு இருக்கார்ங்கிறியே?”

“எதைப் பாடினாலும் காசு வர்லையாம்”

 *****************************************************************************

 ”இப்பல்லாம் எல்லாப் பாடகர்களும் கச்சேரிக்கு நடுவில இடைவேளை விடறாங்களே.. இவர் ஏன் விடறதில்லை”

“விட்டா ஓடிடுவாங்களே..”
சர்தார்ஜி ஜோக்ஸ்

ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு
இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..
எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்
பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர்
அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு..
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம்
உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த
லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..

சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு
கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய
ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே
திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப
அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்..
என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு
மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும்
தெரியலே...!!
------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜிம்மி, ஜாக்கி என்ற இரு நாய்களும் சர்தார் மாதவ் சிங்கும் ராக்கெட்டில்
விண்வெளிக்கு அனுப்பப் பட்டார்கள்.தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து
[த.க.நி.] ராக்கெட்டுக்கு ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன.

த.க.நி. ; ஜிம்மி...

ஜிம்மி ; லொள்.. லொள்..

த.க.நி. ; சிவப்பு பொத்தானை அழுத்து..! [ஜிம்மி அவ்வாறே செய்கிறது]

த.க.நி. ; ஜாக்கி....

ஜாக்கி ; லொள்..லொள்..

த.க.நி. ; நீல நிற கைப்பிடியை முன்னோக்கித் தள்ளு..[ ஜாக்கி சொன்னபடியே
செய்கிறது ]

த.க.நி. ; மாதவ்..

மாதவ் சிங் ; லொள்..லொள்..

த.க.நி. ; குரைக்கிறதை நிறுத்து.. ரெண்டு நாய்க்கும் சாப்பாட்டை வை.. வேற
எதுவும் பண்ணாதே.. ஏன்னா உனக்கு புத்திசாலித்தனமான விஷயங்கள் எதுவும்
புரியாது..!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது
அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.
முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.
அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.
விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.

எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..

லைசென்ஸா..? அப்படின்னா..?

அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..

ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )

அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..
முதல்லயே சொல்லப்படாதா..?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நம்ம சர்தார் ஆபீஸில் இருந்து வரும்போது ஒரு சிறுவன் தன் தொப்பியை ஸ்டைலாக
திருப்பிப் போட்டிருப்பதைப் பார்த்தார். இவருக்குதான் எல்லாவற்றையும் தானும்
செய்யவேண்டும் என்ற ஆவல் ஆயிற்றே.. தன்னுடைய தலைப்பாகையையும் திருப்பி வைத்துக்
கொண்டார். வீட்டு அருகில் வரும்போது பக்கத்து வீட்டு சர்தார் கேட்டார்..

ஓயே.. ஆபீஸுக்கு போய்க்கிட்டு இருக்கியா? வந்துக்கிட்டு இருக்கியா..?


----------------------------------------------------------------------------------------------------------------------------

நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக்
கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர்
சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு.
அதனாலே தங்கிட்டு காலேல போ..

சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து
கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே
திரும்பினார்..

நண்பர் கேட்டார்.." எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?'

சர்தார் சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான்
என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!



---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த
மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே
தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..
அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப்
பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்
வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே
இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை..
எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து
வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.."
மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!

--------------------------------------------------------------------------------------------------

ஒரு அமெரிக்கர் தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்தார். வழிகாட்டியிடம்
பேசும்போது அரசியல் பக்கம் பேச்சு திரும்பியது.

அமெரிக்கர் ; நாங்கள் தேர்தல் நேரங்களில் டாக்சியில் போனால், டிரைவருக்கு
மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து எங்கள் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுவோம்.

வழிகாட்டி ; நாங்கள் டாக்சியை விட்டு இறங்கி டிரைவரின் முகத்தில் ஒரு அறை
கொடுத்து 'காசா கேக்கறே.. ஒழுங்கா ஓட்டைப் போடுன்னு எதிர்க் கட்சி
பேரை**சொல்லிட்டு போவோம்...!

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் 
- அன்புடன் R.P.OM   

Tuesday 8 January 2013

veettu kurippu

* ஊதுவத்திகளை ஏற்றுவதற்கு முன் நீரில் நனைத்து பின்பு காற்றில் உலரவிட்டு ஏற்றினால், அதிக மணமாகவும் இருக்கும் நன்றாகவும் எரியும். * பட்டுச் சேலைகளைத் துவைக்கும்போது அலசும் நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் சாயம் போகாது; மங்காது. பட்டுச் சேலையும் பளிச்சிடும்.
* வெள்ளிப்பாத்திரங்களில் கருமை படராமல் தடுக்க, அவற்றை அடுக்கி வைக்கும்போது இடையிடையே கற்பூர வில்லைகளையும் போட்டு வைக்க வேண்டும்.
* மருதாணியால் ஆடையில் ஏற்படும் கறைபோக, அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் சோப் போட்டு அலசினால் கறை போய்விடும்.
* மேஜை ட்ராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பைத் தட வினால் எப்போதும் சிரமமில்லாமல் திறந்து மூடலாம்.
* பூசணிக்காய் சாற்றில் தங்க நகைகளை ஊற வைத்து கழுவினால் அவை நன்றாகப் பளிச்சிடும்.
* தரையைத் துடைக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு துடைக்க, ஈக்கள் பறந்தோடும். தொந்தரவில்லாமல் துடைக்கலாம்.பச்சை மிளகாயை ஃப்ரசருக்குள் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். ஒரு நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்து இதை பயன்படுத்தவும். இதே முறையில் தேங்காயையும் வைக்கலாம். 

ஒரு கோப்பை வினிகருடன் மூன்று கோப்பை தண்ணீரை கலந்து ஜன்னல்களை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.

துணிகளில் பட்ட எண்ணெய்‌க் கரையை நீக்க, முகத்திற்கு தடவும் பவுடரை கரை மேல் போடுங்கள். சிறிது நேரம் விட்டு எப்பொழுதும் போல் துணியை கழுவுங்கள். கரை காணாமல் போகும்.

கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும். 

கீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.

கேஸ் ஸ்டவ்வை எளிதாக சுத்தம் செய்ய சிறிது சோடாவை அதன் மீது ஊற்றி சில நிமிடங்கள் விட்டு, அதன்பிறகு சுத்தம் செய்யவும். 

வெங்காயத்தை வெட்டியபிறகு உடனடியாக பயன்படுத்தி விடவும். வெங்காயம் கிருமிகளை உறிஞ்சும் ஆற்றல் கொண்டது. அரை மணி நேரத்திற்கு மேல் அதை வெளியில் வைக்க வேண்டாம். 

சமைக்கும் போது கீரை மற்றும் பச்சை காய்கறிகளின் நிறம் மாறாமல் இருக்க 2 சொட்டு எலுமிச்சை சாற்றை அதில் சேர்க்கவும். 

வெங்காயத்தை உறிக்கும் போது கண்களில் கண்ணீர் வராமல் இருக்க, உறிப்பதற்கு முன் 5 நிமிடங்களுக்கு வெங்காயத்தை தண்ணீரில் ஊற வைக்கவும். கண்ணீர் மிச்சமாகும்.

வெங்காயத்தை உறிக்கும்போது கண்கள் எரியாமல் இருக்க ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து அதன்பிறகு உறிக்கவும். கண்கள் எரியாது.

Monday 7 January 2013

மூலிகை

மூலிகை :
*மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும்.
*பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.
மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.
மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.
மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.

  • மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.
  • https://www.google.co.in/
  • இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டனர். என்ன செய்வது என்று இந்திய வீரர்கள் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்டு 

    ஒரு சர்தார் மட்டும் தன் மேல் கொசு வலை ஒன்றை சுற்றிக் கொண்டு, மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாகிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். நிலைகுழைந்த பாகிஸ்தானிய வீரர்கள் ஓடி விட்டனர். சர்தாரின் வீர செயலை பாரட்டி எல்லோரும், சர்தாரிடம் கொசு வலையை போர்த்திக் கொண்டு எப்படி உங்களுக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று கேட்டனர். அதற்கு சர்தார் சொன்னார், "எல்லாம் கொசு வலையை போர்த்திக் கொண்டால் குண்டு துலைக்காது என்கிற தைரியத்தில்தான், இவ்வளவு சின்ன கொசுவினாலேயே இதனுல் நுழைய முடியவில்லையே, அதை விட பெரிய தோட்டா எப்படி நுழையும்" என்றார்..இராணுவத்திலிருந்து இந்த சர்தாருக்கு ஓய்வு கிடைத்த பிறகு அவருடை மகனுக்கு அங்கே வேலை கிடைத்தது. இன்னொரு முறை போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டது. இம்முறை சர்தார்(மகன்) மட்டும் மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாக்கிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். ஆனால் எதிரிகள் திருப்பி சுட்டதில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் சேர்க்கப் பட்டார். அங்கு அவரை பார்க்க வந்த சகவீரர் ஒருவர் கேட்டார் "உன் அப்பாவாவது உடம்பில் கொசுவலையை போர்த்திக் கொண்டு எதிரியை நோக்கி சுட்டார், நீ ஏன் ஒன்றுமே அணியாமல் வெளியே வந்தாய்?" அதற்க்கு சர்தார் சொன்னார், "நான்தான் உடம்பில் ஓடோமாஸ் (கொசு கடிக்காமல் இருக்க உடம்பில் சிக்கொல்லும் ஒரு வகை மருந்து) சியிருந்தேனே" என்றார்.

ஜோசியத்துல நம்பிக்கை

MMMMMMMMM

Sunday 6 January 2013

பானங்களில் 
கண்மை தயாரிக்கும் முறை:- வெள்ளைக் கரிசலாங்கண்ணியின் இலைகளைத் தண்ணீர் சேர்க்காமல் இடித்துச் சாறு எடுக்கவும்.25 செமீ நீள அகலமுள்ள வெள்ளைத் துணியை எடுத்து அந்தச் சாற்றில் ஓரிரு முறைகள் சாறு காலியாகும் வரை உலர்த்தி,மீண்டும் தோய்த்து மீண்டும் உலர்த்தி,பின் அந்தத் துணியை உருட்டி திரியாகச் செய்து கொள்ள வேண்டும்.பின் விளக்கெண்ணெயை ஊற்றிய விளக்கில்,மேற்படி கரிசலாங்கண்ணிச் சாறு ஊட்டிய திரியைப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.


 ஒரு புது மண் சட்டியில் தோல் நீக்கிய சோற்றுக் கற்றாழைச் சாற்றை ஐந்து தடவை,தடவி காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அந்தச் சட்டியை அந்த விளக்கின்மீது மூன்று புறமும் செங்கலிட்டு காற்று உள்ளே புகுந்து விளக்கு எரியுமாறு கவிழ்த்து வைத்துவிடவும்.அந்த விளக்கு தொடர்ந்து எரியுமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

 

மறுநாள் அந்த கற்றாழை தடவிய புதுச் சட்டியில் படிந்திருக்கும் கரியை வழித்தெடுத்து போதுமான அளவு சிற்றாமணக்கெண்ணெய் விட்டுக் குழைத்து வெள்ளிச் சிமிழில் பத்திரப்படுத்தி கண்ணுக்கு தீட்டி வர கண் ரோகங்கள் அனைத்தும் குணமாகும்.கண்ணொளி ஒரு காதந் தூரம் காணும்.அதாவது ஒரு காத தூரம் இருக்கும் பொருள்களும் கண்ணுக்குத் தெரியும்.


இப்படிப்பட்ட வெள்ளைக் கரிசலாங் கண்ணி,மஞ்சள் கரிசலாங் கண்ணி,மற்றும் பொன்னாங் கண்ணி, ஆகியவற்றுக்கு சோழர்கள் காலத்தில் வரி விதிக்கப்பட்டது.அதற்கு கண்ணிக் காணம் என்று பெயர்.வரி செலுத்தினாலும் இதன் அருமை மற்றும் பெருமை எண்ணி அக்காலத்தில் உபயோகித்தார்கள். இன்றோ நாம் இலவசமாய்க் கிடைத்தாலும் உபயோகம் அறியாது,இதன் அருமை மற்றும் பெருமை தெரியாது வெளிநாட்டு விஷங்களை மருந்தென்று பெருமை பேசித் திரியும் அவலம் நேராது.


வீட்டில் உள்ள பேரில் பாதிப் பேராவது கண்ணாடி போடாமல் இருப்பதில்லை.காரணம் இது போன்ற மிக நல்ல வழக்கங்கள் வழக் கொழிந்து போனதே!!!கண்மைக்கு போய் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று கேட்பது புரிகிறது????
கண்ணில் போடும் கலிக்க மருந்துகளால், உடலில் உள்ள ராஜ கருவிகளான ஈரல், மண்ணீரல், சிறு நீரகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளும்,குற்றங்களும்,நஞ்சுகளும் நீங்கி உடல் நோயினின்றும் நீங்கி புத்துணர்வு பெறும்.

lips


முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும். சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன. உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்...
பொதுவான ஆலோசனைகள் :
தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.
வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.
உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.
மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.
இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும்.
தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.
லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.
லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.
முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.
தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.
முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும்.
இரண்டு டீஸ்பூன் ஆலிவ் என்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும்.
கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.
உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க பேஸ் வாஷ் அல்லது தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம்.
லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.
உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும்.
உதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் : முதலில் பவுண்டேஷன் தடவிவிட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.
லிப்ஸ்டிக் உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் லிப் சால்வ் உபயோகிக்கலாம். அதே மாதிரி பல வண்ண நிறங்களில் இப்போது வாசலின் வந்துள்ளது. அதையும் உபயோகிக்கலாம்.
லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.
லிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

Tuesday 1 January 2013

உங்களை மேம்படுத்த

முயற்சி உள்ள தவளையாக மாறு வெற்றி பெறுவாய், 
முயற்சி இழந்த தவளை போல் இறந்து போகதே 
உன்னிடம் ஏதாவது ஒரு திறமை இருக்கும் ஒரு நாள் அது உன்னை வெளிப்படுத்தும்.அது வரை போராடு,அதனோடு உறவாடு.   
- அன்புடன் R .P.ஓம்  
உங்களை மேம்படுத்த தியானம் உதவும் கற்றுக்கொள்ளுங்கள் 8056156496

இலவசமாக தியானம் கற்று தருகிறேன்  எதற்கு? 

omaalaya divine love yoga centre 8056156496

முறையாக தியானம் கற்று நலம் பலம் வளம் பல பெற்று அன்போடும் ஆனந்தத்தோடு வாழ்வாங்கு வாழ்ந்து மற்றவர்களையும் வாழ்வாங்கு வாழ செய்யுங்கள் . அன்பும் அமைதியும் உங்களிடமிருந்தால் ஆரோக்கியம் செல்வம் ஞானம் எல்லாம் உங்கள் வசமாகும் .

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம் 
- அன்புடன் R.P.OM  




என்னுடைய வேலை,யோகாதியானம் மூலம் வந்த வருவாய்  எல்லாவற்றையும் விட்டு விட்டு இலவசமாக கற்று தருகிறேன்.
ஆலோசனைக்கட்டணம் 1000 கிடைக்கும்,பெயர்வைத்தால் 3000 திலிருந்து 5000 வரை ,தியானத்திற்கு வகைக்கு ஏற்றார் போல வருவாய், இப்படி கட்டணம் வசூளித்ததற்கு காரணம் எனக்கொரு லட்சியம் இருக்கிறது அதற்காகத்தான் .
என்ன லட்சியம் 
1.மக்கள் அரசியல் வாதிகளிடம் கைஏந்தாது சொந்தகாலில் நிற்க அவர்களுக்கு திறமையும் செல்வமும்  வேண்டும் 
2.எங்கும் அன்பும் ஆனந்தமும் பெருக வேண்டும் 
3.பல திறமைகளை ஒரு மனிதன் பெற்றிருக்க வேண்டும் 
உதாரணத்திற்கு சொல்ல போனால் எங்கள் நிறுவனத்தால் படிப்பு சொல்லித்தரப்படுகிற ஒரு டாக்டருக்கு தையல் ,மெக்கானிக் வேலை கூட எளிதாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்,பல கலைகளை இலவசமாக கற்று தருவோம்.
இந்தியாவில் உள்ள எல்லா கிராமங்களிலும் இந்த சேவை மையத்தை பெரிய கட்டிடம் கொண்டு நிகழ்த்த வேண்டும் .அதற்காக கட்டணம் வாங்க தீர்மானித்தேன்.
ஆனால் இப்போது அது முடியாது வருகிறவர்கள் தாலியை எல்லாம் அடகு வைத்தது எடுத்து வந்து கட்டணம் செலுத்துகிறார்கள் என்று அறிந்தபோது நமக்கு நெருங்கிய உறவில் ஒரு மரணம் நிகழ்ந்தால் எப்படி அடி வயிற்றில் ஒரு சோகம் வயிற்ரை பிசையுமோ அப்படி ஒரு ஆழ்ந்த வருத்தமும் கருணையும் என்னை வாட்டி வதைக்கிறது.முடிவெடுத்துவிட்டேன் என்ன ஆனாலும் சரி மக்களை வாட்டி பணம் வாங்க வேண்டாம் என்று,இல்லாதோர பரவாயில்லை இருப்போரும் இந்த வசதியை அனுபவிக்கலாமா?
கூடாதுதான்  இருந்தாலும் எல்லோரும் என்னை பொருத்தவரை தெய்வம் யார்க்கு தொண்டு செய்தாலும் இறைவனுக்கே. உங்களால் முடிந்தால் பணம் ,பொருள் வசதி கொண்டு உதவி ஏழை எளிய மக்கள் சேவைக்கு உதவுங்கள்        
முடியாமல் போனால் அன்பையும் தெய்விகத்தையும் என்னிடம் இருந்து பகிர்ந்து கொள்ளுங்கள்
 அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்.
-  அன்புடன் R.P.OM       

மூன்றுவகை தியானம் 
1.புற சாந்தி பிரணவ தியானம்[ உலக சுகம்] 
2.அக சாந்தி பிரணவ தியானம்[ உலக சுகம்] 
ஞானம்,கடவுள் 
3.அகப்புற சாந்தி பிரணவ தியானம்

1.திருமணம் நடக்கும் 
2.நீங்களும் சொந்த வீடு கட்டுவீர்கள் 
3.நன்கு படிப்பீர்கள் 
4.போட்டி பந்தயங்களில் சாதிப்பீர்கள் 
5.பிரச்சனை விலகும் 
6.நினைத்தது நடக்கும்  
7.கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்கும்.
8. ஆரோக்கியம் பெருகும்.
9.ஆனந்தம் நிலவும்
10.குழந்தை பேரு கிடைக்கும் 
11.உத்தியோக உயர்வு கிட்டும் 
12.வெளி நாடு செல்வீர்கள் 
13.தொழிலில் லக்ஷ்மி கடாக்ஷம் பொங்கும் 
14.உங்கள் பெயரே  அதிஷ்ட வசிய மந்திரமாக மாறும். .

ஆஹா எல்லாம் நல்ல வார்த்தைகளாக நம்பிக்கை தருகிறீர்களே .ஆமாம் இறைவனே சாத்தியம் என்கிறபோது தியானத்தால் இவ எல்லாம்மும் சாத்தியம் தான் .
 அனால் நிபந்தனை உண்டு 
1.உங்கள் கர்மாவை முதலில் களைய வேண்டும் இல்லையேல் அது சனீஸ் வரனை விடவும் மோசமானது 
2.நம்பிக்கையுடன் முறைப்படி பயில வேண்டும்,எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும் நம்பிக்கை யுடன் இருக்க வேண்டும்  
3.பல இடங்களில் தியானம் பழக கூடாது 
4.எளிய கட்டணம் பெற்றாலும் ஏழைகளுக்கு குறைந்தது  25,000 ரூபாய் வரையிலும் செலவாகும் வசதி படைத்தோருக்கு  வசதிமிக்கொருக்கு 3 லட்சம் வரை செலவாகும் .ஆனால் எல்லா பயிற்சியும் பரிகாரமும்  இலவசம்தான்,இலவசம் தானே என்று அலட்சியமாய் பழக கூடாது    

இப்போது என்னிடம் எந்தவசதியும் இல்லை ஆதலால் உங்களுக்காக பயன்படுத்த நீங்கள் கொண்டு வரவேண்டிய பூஜை பொருட்கள் 
1.யந்திரம் 
2.தாயத்து 
3.முடிச்சு கயிறு 
4.எலுமிச்சை பழம் 
5.விபூதி,எண்ணை,பூ 
6.புதுத்தாலி 
7.வெற்றிலை பாக்கு ,பழம் 
இவைகள் எல்லாம்  பூஜை மார்க்கத்தில் பரிகாரம் தேட விழைவோருக்கு,மற்றவர்கள் விருப்ப பட்டால் கொண்டு வரலாம்.எந்த பொருட்களும் இன்றியும் உங்கள் வாழ்வு வளம் பெரும்,பூஜை பொருட்கலும் பரிகாரத்திற்கு பிள்ளையார் சுழிதானே. 

என்னிடம் கவர்ச்சியான வெப்சைட்டுகள் இல்லை ,ஆதலால் தரக்குறைவாக எண்ணிவிட வேண்டாம்.கடை விரித்திருக்கிறேன் வள்ளலாரைபோல பயன் பெற்று செல்வது உங்கள் கர்ம வினையை பொருத்தது.

உடனே நடக்குமா? எப்போது நடக்கும் 108 நாட்களில் நடக்கும்.
உங்கள் கர்ம வினையைப்போருத்து காலம் நீடிக்கும்,சிலருக்கு மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும் 

1.சிலருக்கு புதிய நல் கர்மா ஏற்படுத்த வேண்டும் 
2.சிலருடைய கர்மா கண்ணாடியில் படிந்துள்ள தூசு அழிக்க வேண்டும் அவ்வளவுதான் காரியம் கை கூடும் 
3.சிலரது கர்மா பாறாங்கல் வெடி வைக்க வேண்டும் 
4.சிலரது கர்மாவை களைவதற்கே ஆராய்ச்சி செய்ய வேண்டிய அளவு கொடியாதாக இருக்கும்.

பொறுமை இல்லை என்றால் போலிகலை கண்டு சுற்றி காலம் முழுவதும் அலைய வேண்டியதுதான் .பொறுமையோடிருங்கள் 100 சதவிகிதம் சாதிப்பீர்கள் 

இப்போது என்னால் யோகா மட்டும் சொல்லி தர முடியாது அதற்கான இட வசதியோ ,நேரமோ,பொருள் வசதியோ இல்லை ,யாரவது இடம் பொருள் தந்து உதவும் காலத்தில் நானும் உதவுகிறேன்.முடிந்தால் உங்கள் பிளாக்குகளில் இதை ஷேர் பண்ணி 4 பேருக்கு தெரிய படுத்துங்கள் அவர்களும் பயன் பெறட்டும் .
சில சமயங்களில் உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காமல் போகலாம் ,ஆனால் கண்டிப்பாக எல்லோர்க்கும் பயிற்சி,பரிகாரம் உண்டு
வருத்தப்படுவோரே என்னிடம் வாருங்கள் இளைப்பாறுதல் தருகிறேன் என்று சொல்ல இறைவனுக்கு மட்டுமே தகுதி உண்டு .இருந்தாலும் இறைவன் பெயராலேயே உன்காளையும் நான் அவ்விதமாகவே அழைக்கிறேன்